Vasundhara ~ வசுந்தரா
வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.